ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் எண்ணும் பணியின்போது, கோவில் ஊழியர் சங்கர் என்பவர் பல நூறு அமெரிக்க டாலர் நோட்டுகளை திருடியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஊழியர் சங்கர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மற்ற ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.