லால்குடி: மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் குடித்துதற்கொலை

51பார்த்தது
லால்குடி: மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் குடித்துதற்கொலை
லால்குடி அருகே உள்ள கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சுகந்தி வயது 65 கடந்த ஒரு வருட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் கல்லக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி