திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேளகாகாநத்தம் ஐயாற்று பாலம் அருகே மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் முசிறி போலீசார் சோதனைக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர். போலீசார் ஒரு யூனிட் மணலுடன் கூடிய வாகனத்தை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.