அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி., இன்பதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.