கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ஆா். பழனிசாமி (42). முதுகுவலி, வயிற்று வலிக்கு கடந்த மாா்ச் 4 முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வந்த அவா் மார்ச் 11ஆம் தேதி பகலில் மருத்துவமனையின் முதலாவது தள கழிவறை அருகே இருந்த கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.