திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகர் கரை பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு கடந்த ஒரு வாரமாக சரிவர குடிநீர் வரவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி மேயரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.