திருச்சி தில்லை நகரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக அமர வைப்பதற்கான பணிகள் மற்றும் தேர்தலை ஒட்டி நடைபெற உள்ள தெருமுனை பிரச்சாரங்கள் குறித்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆலோசனைகளை வழங்கினார்.