மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி விசாலாட்சி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். நேற்று முன்தினம் மலேசியா செல்லும் விமானத்தில் ஏறத் தயாரானபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளார். விமான நிலைய அதிகாரிகள் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.