கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்தவர் முருகேசன் இவர் மணப்பாறையில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள தனியார் பள்ளியில் நான்காவது மாடியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.