திருச்சி கல்மந்தை காலனியில் 2018-ல் இடிக்கப்பட்ட 128 குடிசைமாற்று வாரிய வீடுகளுக்குப் பதிலாகக் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள், ஏற்கெனவே வசித்தவா்களுக்கு வழங்கப்படாமல் வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகப் பாமக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் அனுமதியை ரத்து செய்து, ஏற்கெனவே இருந்தவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது.