திருச்சி பீமநகர் பஞ்சு கிடங்கு பகுதியில் நண்பருடன் போனில் பேசிக்கொண்டிருந்த ஹரிராம் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த முகமது நசீர் மற்றும் சாரதி ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்து, மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஹரிராம் தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இது தொடர்பாக செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.