துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதிக்கு உட்பட்ட கொப்பம்பட்டி, சோபனபுரம், வைரிசெட்டிப்பாளையம், வளையப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து 12 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.