திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், ராம்ஜிநகர் பெட்ரோல் பங்க் அருகே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கங்காதேவி என்பவர் கஞ்சா விற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 3 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.