அவினாசி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அவினாசி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் முன்னிலை வகித்தார். சி. பி. ஐ. இயக்குனர் பிரவீன் சூட்டுக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதையும், மாநில அரசே தேர்வுகளை நடத்துவதை மத்திய அரசு அனுமதி மறுப்பதையும் கண்டித்து கண்டன உரை எழுப்பப்பட்டது.