அவினாசியை அடுத்த நடுவச்சேரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). தொழிலாளி. இவர் இளம்பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்ததாக அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.