திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கொடுவாய் பகுதியில் நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அதன் மேற்கூரை திடீரென கழன்று காற்றில் பறந்து பின்னால் வந்த டூவீலர் மீது விழுந்தது. இதில் டூவீலர் ஓட்டுனர் சிறிய காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.