அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்த நிலையில், வேலுமணி தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல், பெருந்துறை MLA ஜெயக்குமார், தாராபுரம் MLA சத்யபாமா ஆகியோர் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா நேற்று ஏற்கப்பட்ட நிலையில் இன்று 3 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் (திருச்சி கிழக்கு உட்பட) எண்ணிக்கை 4-ஆக உள்ளது. இதனால் விரைவில் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.