பஞ்சபட்டியில் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள்

56பார்த்தது
பஞ்சபட்டியில் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஒன்றிய இளைஞரணி சார்பாக தளவாய் பட்டினம் ஊராட்சி பஞ்சபட்டியில் அமைந்துள்ள மைக்கேல் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் 6 மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். வி. செந்தில்குமார் தலைமையில் வழங்கப்பட்டது.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே. எஸ். தனசேகர், சின்னக்கம்பாளையம் பேரூர் செயலாளர் ஆர். பன்னீர் செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, கோணப்பஞ்சாலை எம். ராஜாமணி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் எம். கொங்கராஜ், பி. செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you