வடகிழக்கு மழையால் இயற்கை சீற்றம் காரணமாக ரோடு பாதிக்கப்பட்டால் அதை சரி செய்ய நெடுஞ்சாலைதுறை முடுக்கிவிடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெடுஞ்சாலைதுறை ரோடுகளில் வரும் மழை காலத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மணல் மூட்டைகள், மண் வெட்டி, கடப்பாறை, அரிவாள், முள் கரண்டி, பொக்லைன் இயந்திரம், டிவைடர்கள், சாலை சிவப்பு கூம்பு, முன்னெச்சரிக்கை ரிப்பன், மர அறுவை இயந்திரம், ஜெனேரேட்டர் ஆகிய உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப்பணியாளர் அனைவரும் வரும் மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக கோட்டப்பொறியாளர் தெரிவித்தார்.