திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள அரசு சமூகநீதி மாணவர் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர் அரவிந்த் மீது, விடுதி மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற சைல்டு லைன் அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் மகளிர் போலீசார் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.