திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழவு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் மற்றும் பேச்சியம்மன் கோவிலை, பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அப்போது, கோவிலை ஒப்படைக்க முன்னாள் நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் பூட்டை உடைத்து கோவிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.