திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சில தினங்களாக மருத்துவமனை முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, அப்பகுதி சேறும் சகதியுமாக மாறி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.