திருப்பூர் மடத்துக்குளம் பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய உடுமலை உழவர் சந்தைக்கு வர வேண்டியுள்ளது. உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருவதால் போதிய இடவசதியும் இல்லை. எனவே மடத்துக்குளம் பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.