
பல்லடத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் வலையபாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு செய்தித்துறை சார்பில் 58 செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலில் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தால் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.








































