திருப்பூர் மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்லடம் அருகே லட்சுமி மில் பகுதியில், மேஜிக் நிபுணர் யோனா மற்றும் அவரது குழுவினர் மேஜிக் நிகழ்ச்சி மூலம் நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தாசில்தார் கோவிந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.