திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் பிரிவில், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி பலத்த காயமடைந்தார். காயமடைந்த இளைஞர் சாலையின் நடுவே கிடந்தபோதும், பல வாகனங்கள் அவரை கடந்து சென்றன. யாரும் உதவி செய்ய முன்வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.