திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புதிய மாவட்ட துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற திரு. பார்த்திபன், நேற்று காலை 10 மணியளவில் பல்லடம் நகரின் பல்வேறு பகுதிகளை மக்களோடு மக்களாக நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது, ஒரு மூதாட்டிக்கு பண உதவி செய்ததைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவரை மனதாரப் பாராட்டினர். ஒரு காவல்துறை அதிகாரியின் இந்தச் செயல் பலரால் வரவேற்கப்பட்டது.