திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் புகையிலை கடத்தி வருவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேம்நாத் குமார் என்பவரை வயது 26 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் புகையிலை பொறக்க கடத்தி வைக்கப்பட்ட வாகனத்தையும் 750 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், இந்த வழக்கில் ஹேமநாத் குமார் உடன் வந்த தலைமறைவான ரேணுகவுடா (வயது 27) என்ற மற்றொரு நபரையும் தேடி வந்தனர். ரேணுகவுடாவை பல்லடம் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் அவரிடம் இருந்த 750 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.