திருப்பூர்: 90 வலி நிவாரணி மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது

56பார்த்தது
திருப்பூர்: 90 வலி நிவாரணி மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூரியர் மூலம் கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கூரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூர் நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்த மோகன்(வயது 27) என்பவருக்கு பெங்களூருவில் இருந்து வந்த கூரியரை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 90 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த கூரியரை கைப்பற்றி மோகன் மற்றும் மாத்திரை விற்பனையாளரான பிச்சம்பாளையத்தை சேர்ந்த சஞ்சீவிகுமார் (23) ஆகியோரை கைது செய்து 90 வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.