திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பூலவாரி சுகுமார் நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கூட்டமாக அமர்ந்திருந்தனர்.
அந்த வீட்டைச் சுற்றிவளைத்த போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 39), அசோக்மூர்த்தி (43), கார்த்திகேயன் (43), திலீப்குமார் (31) ஆகியோர் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.20,000 மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.