மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் (ECLGS) 5.0 திட்டத்தை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (AEPC) வரவேற்றுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளர்களுக்கு பணப்புழக்க ஆதரவை வழங்கும் இந்தத் திட்டம், உற்பத்தியைத் தக்கவைக்கவும், வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், விநியோகச் சங்கிலியைப் பராமரிக்கவும் உதவும். 100% உத்தரவாதம் மற்றும் பூஜ்ஜிய கட்டணம் ஆகியவை கடன் பெறுவதை எளிதாக்கும் என AEPC தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.