திருப்பூர் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு மையங்கள் உள்ளிட்ட அனைத்து மனநல நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 044 26420965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.