திருப்பூர் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள், சமூக சேவை அனுபவம் உள்ளவர்கள், குற்ற வழக்குகள் நிலுவையில் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை மாவட்ட நல அலுவலகத்தில் பெற்று, 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.