திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில், ஒட்டன்சத்திரம் வரை செல்லக்கூடிய பயணிகளை ஏற்ற நடத்துனர் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 12 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயணிகளின் வாக்குவாதமும், நடத்துனரின் அலட்சியமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.