ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்பள்ளி ஊராட்சியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேற்று (ஜனவரி 10) நிதியுதவி வழங்கப்பட்டது.
செங்கப்பள்ளி ரோட்டரி சங்கம் மற்றும் அவினாசியில் செயல்படும் தொண்டு அறக்கட்டளை மூலம் செங்கப்பள்ளி பள்ளிக்கு புலவர் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கப்பள்ளி ரோட்டரி சங்க பொருளாளர் பிரபு, முத்தம்பாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் கோவிந்தராஜ், உத்திரமூர்த்தி, கவுரிசங்கர், ஷீலாதேவி, கிருத்திகா ஆகியோர் நிதி உதவியை ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி அவர்களிடம் வழங்கினர்.