திருப்பூர் கே.வி.ஆர். நகர் அய்யன் நகர் 4வது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). மதுபோதையில் இருந்த சுரேஷ் திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் பயணம் செய்த 19 வயது மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.