இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

1பார்த்தது
கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த ரகு (30) மற்றும் அவரது மனைவி ஜோதி (20) காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி, தனது தாயாருடன் திருப்பூர் வந்து வசித்து வந்தார். ஜோதி திருப்பூரில் இருப்பதை அறிந்த ரகு, நேற்று அங்கு வந்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தின் போது, ரகு தனது மனைவி ஜோதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி