திருப்பூர் திருமுருகன் பூண்டியை அடுத்த ராக்கியாபாளை யத்தில் உள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் புதுச்சேரி துணை முதல்-அமைச்சரும், உள்துறை அமைச்சருமான நமசிவாயம் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் 5 நிமிடங்கள் தியானம் செய்த துணை முதல் அமைச்சருக்கு மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக கோவிலின் சிறப்புகளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஞானகுரு விளக்கிக் கூறினார்.