திருப்பூர் - இந்து அன்னையர் முன்னணி சார்பில் நாளை (டிசம்பர் 25) அலகுமலையில் நடைபெறவிருக்கும் வேல் பூஜையையொட்டி, மங்களவேல் வாகனம் பெருமாநல்லூர் காளிபாளையம் ஊராட்சி பகுதியில் மக்கள் தரிசனத்திற்காக வந்தது.
மங்கள வேல் வழிபாடு மாவட்டத் துணைத் தலைவர் எம். சாமுண்டி தலைமையில் நடந்தது. இதில் மாநிலச் செயலாளர் வி. எஸ். செந்தில், சி. பி. சண்முகம், கோட்டச் செயலாளர் குறிஞ்சி என். சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் பாண்டியன், ரஞ்சித், பிரகாஷ், மகேந்திரன், பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா பள்ளி மாணவி மோனிகா தலைமையில் மாணவ-மாணவிகள் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் முருகன் பாடல்களை பாடினார்கள்.
காயத்ரி பில்டர்ஸ் உரிமையாளரும் பா. ஜனதா நிர்வாகியுமான எஸ். பி. பிரகாஷ், பா. ஜனதா ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அன்னதானம் நடைபெற்றது.