திருப்பூா்: சட்டவிரோத மது விற்பனை.. இருவர் கைது

திருப்பூர் மாநகரில் வீரபாண்டி மற்றும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக பாபு பாஷா (45) மற்றும் ராமு (52) ஆகிய இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
