திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. மாணவர்கள் கல்லூரி இணையதளம் வாயிலாக தங்களின் தரவரிசையுடன் கூடிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் மலர்வண்ணன் தெரிவித்துள்ளார்.