திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சி, உடுமலை பழனி சாலையில் உள்ள சென்னிமலை சாதிக் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.