திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி சாலையில் பாலப்பம்பட்டி பல்வேறு பகுதியில் தற்போது நெடுஞ்சாலை ஓரம் சீமைக் கருவேலமரங்கள் அதிக அளவு ஆக்கிரமித்துள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.