திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதி ஒட்டிய கிராமங்களில் வனத்துறை சார்பில் நடந்த நிலைவால் கணக்கெடுப்பில் பல வகையான பறவைகளை தன்னார்வலர்கள் பதிவு செய்தனர். குறிப்பாக பெண் மார்பு மீன் குத்தி, சுடலை குயில், மரம் கொத்தி, காட்டு சிலம்பெண்கள், தையல் காரி, செண்பகம், தேன்சிட்டு, அக்கா குயில் மற்றும் தேன் பருந்து ஆகிய பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டது. கணக்கெடுப்பில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.