திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள காந்தளூர், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு சமீப காலமாக பெய்து வரும் மழையால், அங்குள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கு தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.