திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி சாலையோரத்தில் கடந்த சில மாதங்களாக இறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டையாக இரவு நேரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட இறைச்சி கழிவுகளை அகற்றவும், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.