திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சார்பில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் போதிய பராமரிப்பு இன்றி பல நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் தெருவிளக்குகளை உடனடியாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.