திருப்பூர் உடுமலை தளிரோடு ரயில்வே சுரங்கப்பாதை வழியாக பாலாஜி நகர், அரவிந்த் கண் மருத்துவமனை போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இரவு, பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.