திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சேன் ஜெரோம், கபிலரின் குறிஞ்சி பாடலில் உள்ள 99 பூக்களின் பெயர்களை 30 வினாடிகளில் கூறி கலாம் உலக சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனைக்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே மற்றும் வேளாண்மை துறை இணை இயக்குனர் ஆதிசாமி ஆகியோர் மாணவரைப் பாராட்டி வாழ்த்தினர்.