திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற குறுமைய ஹாக்கி போட்டிகளில் 19 மற்றும் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம், மாணவர்கள் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களை வழிநடத்திய பள்ளி தலைமை ஆசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமரவேல் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினரையும் பள்ளி நிர்வாகம் பாராட்டியுள்ளது.